Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

16. கிருபையின் கால முடிவு

கிருபையின் காலம் எப்போது முடியுமென்று ஒருவரும் அறியார்

எப்பொழுது இந்த தூது முடிவடையும் அல்லது எப்பொழுது கிருபையின் காலம் முடிவிற்கு வரும் என்பதை தேவன் நமக்கு வெளிப்படுத்தவில்லை. வெளிப்படுத்தப்பட்ட காரியங்களை நமக்காகவும், நமது பிள்ளைகளுக்காவும் நாம் ஏற்றுக்கொள்வது அவசியமாகும். அதேசமயம் சர்வவல்லவரின் பரலோக ஆலோசனை மன்றங்களில் மறைவாக வைக்கப்பட்டிருக்கிறவைகளை அறிந்துகொள்ள முயற்சிக்காமலும் இருப்போமாக.... கச 165.1

கிருபையின் காலம் எப்பொழுது முடிவடையும் என்பதைக்குறித்து, என்னிடத்தில் ஏதாவது விசேஷித்த வெளிச்சம் உள்ளதா என்று கேட்கின்ற அநேக கடிதங்கள் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன. அவர்களுக்கு நான் கொடுக்கின்ற பதில்: ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகின்றபடியால், பதற்காலமாகிய இதுவே நாம் கிரியை செய்ய வேண்டிய நேரம் என்ற இந்தத் தூது மாத்திரமே, அளிப்பதற்கு என்னிடத்தில் இருக்கின்றது என்பதே. — 1SM 191 (1894). கச 165.2